🙏 திருவருட்கழன் மாலை

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது


திருவருட்கழன் மாலை - கலிவெண்பா 

1. திருவார் செழுங்கமலச் சீராரும் பொற்றா 
ளருமா முனிவ ரமரர் - பெருமால்கொண்
 
2. டின்னஞ் சுவடொற்றிக் காணாதங் கேதமுற 
முன்னை யொருமூவர் தரமுயலப் - பின்னவியற்

3. பாதகமே செய்துழலும் பாவியே னைப்பொருளா 
நாதனுடல் சாத்தி நலந்திகழப் - பேதையேன்

4. றன்னைவலிந் தாண்டருளித் தாவாத வென்பவத்தை 
முன்னமுறு மூலமல மாமாயை - தன்னினொடுஞ் 

5. சேரத் துணித்துச் சிறியேனைத் தானாக்கச் 
சீருற்ற கோவத்தைச் சீர்ப்பதியில் - வீரைப்

6. பெருமான் சிவப்பிரகா சப்பெருமான் பேரா 
வருண்மா மகடுறவி யாயுந் - திருமா

7. மகள்வீறு சாந்தியொடு வாழ்கருணை யன்பாந்
துகடீர் தயைமாதர் சூழ- மிகுஞானச்

8. சித்தர்கணஞ் சேவிப்பச் சீராரு நல்லன்பர் 
பத்தியுட னின்று பரவியிட - வெத்திசையு

9. மாரணங்க ளாகமங்க ளாத்தர்மொழி யென்கின்ற 
பாரணங்களெங்கும் பரந்தொலிப்பக்-காரணந்தான்

10. யோகாந்த ஞான வுயர்முத்தி மண்டபத்தி 
லேகாந்த பீடத் தினிதிருந்து - சோகாந்த

11. வெங்  கோலகால மிகப்பெருத்த வெவ்வினையாம் 
பொங்கார் மயனெறியிற் போய்நரகி - லங்கே

12. தலைகீழா வீழ்வேனைத் தன்னருளா கின்ற 
வலியாலே தானெடுத்து வன்பாய் - நிலையதுற

13. நெஞ்சத் தினைவணக்கி நீள்வஞ்சப் பற்றெல்லாந் 
துஞ்சத் துக்ளாகப் பார்த்தருளி - நஞ்சதுறு

14. மென்கோண் முழுது மெழிற்கணாற் றான்விழுங்கி
நன்கேது மில்லாதே னாய்த்தலையி - லன்போடும்
 
15. வைத்தவடி வாசாம கோசரமென் றாரணங்கள் 
பித்துறுபேரன்பாய்ப் பிதற்றுமடி - யெத்தவருந்

16. தேடுமடி தேட்டமெலாந் தீர்க்குமடி திண்ணன்பிற் 
கூடுமடி. கூடற் கரியவடி - பாடியிடும்
 
17. பத்தர்க்கு நல்லவடி பாதகனே னைப்பிடித்து
முத்திப்போ கத்தின் முழுத்துமடி - சித்தத்தை

18. யாற வளித்தவடி யாசை யறுக்குமடி 
யூறு முளத்தை யொருக்குமடி - வேற்தற

19. தன்னை யளிக்குமடி சால வினியவடி 
யென்னை யுருக்கியின் பித்தவடி - முன்னையொரு
 
20. மூவர்க்கு மூலவடி மூவாது சாவாது 
தேவிற் பொலிந்து திகழ்ந்தவடி - தாவற்ற

21. சுத்தசுக போதவடி சொல்லிற் படாதவடி 
பெத்தமொடு முத்தியிற்பே ரின்பவடி-யெத்தியெனை

22. யாரவென வந்தவடி யாயேனை யாண்டருளும்
பேரருளாற் றான்பெரும்பித் தானவடி - சீரருளா

23. லெல்லை யிறந்தவடி யென்றுமுள தாயவடி 
சொல்லுமனஞ் செல்லரிய தூயவடி-தொல்லைவினை

24. போகத் துரந்தவடி பூரணம தாயவடி
மாகத் தவருண் மறைந்தவடி - யோகத்தின்

25. மெய்த்துமுடி வாயவடி மெய்யன்பி லார்க்கென்றும் 
பொய்த்தவடி பூமராய் நின்றவடி - நித்தலுமென்

26. பேராத பேரவலங் கண்டும் பிசகலறச் 
சீரார் திருக்கருணை செய்யுமடி - யோராதே

27. யென்றுமப ராதமே செய்திடினுந் தான்முனிவை
யொன்று மறியாத வொப்பிலடி - கன்றுமனப்

28. புல்லினத்தேநான்மறந்தும் போகாமைத் தன்னன்பர்
நல்லினத்தை யேகூட நல்குமடி - யல்லலுறுஞ்
 
29. சாதி குலச்சடலைச் சங்கற்ப நான்சாடப் 
போத மளித்த புனிதவடி - மேதக்க

30. வெட்டாமி யோகங் களும்பயனுங் கோதெனநான் 
விட்டே விளையாட வைத்தவடி - துட்டாய

31. வென்கொடுமைநெஞ்சத் திருந்தகலா தேயருள்செய்
நன்கதனான் மிக்கு நயந்தவடி - தன்கருணை

32. காட்டவெனை யாண்டவடி காயமதாய் மாளுமெனை 
மீட்டவடி யுள்ளே விழித்தவடி-பாட்டினொடு

33. பண்ணாகி நின்றவடி பாவனைதீர்த் தாருள்ளக் 
கண்ணாய் மணியாய்க் கலந்தவடி - யெண்ணுதற்கு

34. நான்மறைகள் கூசுமடி நன்கறியே னேத்தியிடு 
மூனவுரை கேட்க வுவந்தவடி - மோனமதாற்

35. றன்முடிவு கூறுமடி தன்பெருமை பாராதே
யென்னை யிங்ஙனாள விசைந்தவடி - பன்னுமறை

36.மூலமென வோதுமடி மூடனே னென்புருக்குஞ்
சீலமதாய் நின்று திகழ்ந்தவடி - காலமவை
 
37. கண்டவடி காலங் கடந்தவடி யென்னுயிரை
யுண்டவடி யுள்ளொளியாய் நின்றவடி-மண்டுபவக்
 
38. காடு சிதைத்தவடி கண்ணாகு மானந்த 
நாடுதனை யெனக்கு நல்குமடி - கேடனே 
 
39. னன்பதறுந் தீங்கொழிய வள்ளூறு முள்ளந்தந் 
தின்பமுறவென்னையிங்ஙன்வைத்தவடி-முன்பின்றே

40. வேதித் திலகுமடி மெய்யரனு பூதியினாற் 
சாதித்துக் காட்டியிடுஞ் சம்புவடி - பேதிக்கு

41. மெப்பொருளு மாயவடி யாவுங் கழன்றவடி 
முப்பதமு மோதி முடிந்தவடி - சிற்பதமாய்

42. நின்றபடி நின்றவடி நேரேயென் கண்குளிர 
வொன்றுமடி யோருவமை யற்றவடி-சென்றடையு

43. மெப்பதமு மாயவடி யேழையர்க்கு நல்லவடி
யொப்புவமை தான்றனக்கா யுள்ளவடி-யெப்பழைய
 
44. கோளும் விரகெவையுங் கொண்டவடி கூழையனை 
யாளு முவந்தடிமை கொண்டவடி - நாளுமுறு

45. நண்புசெறு மென்றனையு நாணிவிடா தேபிடித்துப் 
புண்செயுமென் புன்மையெலாம் போக்குமடி-கண்டு
 
46. கூர வினியவடி கூற வரியவடி 
பார்வையற மெய்யே பணைத்தவடி யூரொடுபே

47. ரின்றி யிலகுமடி யேகரந்த மாயவடி
நன்றினொடு தீங்கதிலா ஞானவடி - வென்றிமிகுந்
 
48. தூய துறவினர்பாற் றுன்னுமடி தூவிஷய
மாயமுறி லங்கே மறையுமடி - காயமது

49. பேணியிடும் பெற்றியரைப் பேயாக்க வல்லவடி
காணுமலைமுற்றுங்கண் ணாக்குமடி - நாணமெலாந்

50. தீர்த்தவடிசெத்தினிப்போய் நான்பிறவாவண்ணமெ 
பார்த்தவடி பரதாதி கேசமுறச் - சீர்த்த

51. வருளே பொழியுமடி யாய்வொன்று மில்லா 
மருளேனை மாயாமைக் காத்துத் - தெருளாவென்

52. சித்தஞ் சிவமாக்கிச் செய்தவெலா மெய்த்தவமா
வைத்தெனைவாழ்வித்துவந்த வள்ளலடி-யெத்திறமு

53. நானாக நல்குமடி ஞாலமெலா மானவடி
வானாடர் காண வருந்துமடி -யூனோ

54. டுயிருடைமையானவெலாங் கொண்டவடியோரேன்
மயலறவென் சென்னிதனின் மன்னி - நயமதுறச்

55. சென்ற நனவைத் திரித்துத் திரிந்தவிடத் 
தொன்றும் விகார மொழித்த வடி - கன்றுமிருள்

56. காண வளித்தவடி காண்கின்ற வக்கரியாய்ப் 
பேணுமிரு டன்னைப் பிரித்தவடி - மாணுணர்வு

57. தானாகி நின்றவடி தன்னிற் பகுதியினை 
யானா தழித்தழியா தானவடி - தானா

58. டறிவெங்கு மாயுள்ளா யெல்லா மறிந்து 
பிறிவின்றி நின்று பிறங்கிச் - செறிகின்ற
 
59. தோற்றந் திதியழிவுந் தன்கணே தோன்றியிட் 
வூற்றத்துக் கோவா தொளிருமடி-யேற்றத்திற்

60. றானிகழ்ந்த கோளெவையுஞ் சாற்றிப் பரன்மிகுதி 
யானெனவே யாவளித்துநின்றவடி-மேனிகழ்ந்த

61. கோளெவையுங்குற்றமெனக் காட்டியக்கோண்மழுக்
நீளும் பரன்கனவாய் நின்றவடி - மாளவெறு

62. முய்த்தவலி காரமதா யோங்குமடி யோதரிதாய்ச் 
சுத்தவெதி ரித்தமறத் துன்றுமடி - யத்தி

63. லறிவயர்வங் கின்மையினா லாய்ந்தற்ற வத்தங்
குறியிலிது விங்கெனலாய்க் கூடி - நெறிமையினிற்

64. போந்துணர்வாய் ஞாலத்து வேராய்ப் புகுந்துணுர்வு 
தேய்ந்து செருகியிடுஞ் சீரழிவால் - வாய்ந்தபரன்

65. றன் சுழுத்தி யாகுமெனச் சுட்டியது தான்கழன்று 
நன்பரமே யாகி நயந்தவடி . முன்புகலு
 
66. மீரியல்பாய் நின்ற விகுதி பகுதியும்போ 
யோரியல்பாய் நின்றங் கொளிருமடி - தீர

67. வுதயாத் தமனமுமற் றோதவத்தை யும்போ 
யிதயாத்த மாகி யிலங்கு - மதுபார்த்துத்
 
68. தீர்ந்து கழன்று தெளிவாய் நிரந்தரமா
யார்ந்த வுணர்வுருவ மானவடி போந்தவித

69. னிற்றிகழும் விச்சுவமே செய்ததுபா ரென்றருள 
வித்தனையு நானென் றியம்பியிடு - மித்திகழ்வால்

70. நின்றபடி நேரே யிதம்வே றெனத்தோன்று
மென்றியல் குற்ற மெனக்கேற்கக் - கன்றலறக்

71. காட்டுமடி யிவ்வளவுங் காணு முபாதிகளை
வாட்டிய திங்கினித்தான் மன்னி நிகழ் - சேட்டுணர்வின்

72. மேற்கிடந்த மாசறுத்த லென்றுவெதிரித்தமுந்
தீர்த்திதமுந் தானாய்த் திகழ்ந்தவடி - பார்த்த
 
73. வனிதமுடன் றானிதமு மற்றொளிரு மம்பொற் 
புனிதவடி பூதவுல குண்ட - தனதுசெய்

74. றானு மிறந்தவடி சாற்றவறி தாயவடி 
யான வுபசமன மாயவடி - மோனபதந்

75. தம்பிரான் வந்து வெளிப்படுமித் தானமென
நம்புமா காட்டி நயந்தவடி யெம்பரம

76. தின்றி யெழிறிகழு மெல்லையிலாப் பேரொளியாய்
நின்றபடி நின்ற நிமலவடி - யென்றுந்த

77. னோத வுலகி னுலப்பில்சுக சாகரமாய் 
நீதியது தானாய் நிகழ்ந்தவடி - யீதெனவே

78. தானிருந்து காட்டத் தயங்குமூ மைக்குடத்தி 
னீர்நிறைந்தாற் போனிறைந்து நின்றவடி - தேனி
 
79. யெற்புத் தொளைதொறுமங் கேறிமயிற் கால்கடொறு 
மிக்குத்தித் திக்கும் விமலவடி - தக்க

80. வொருமையா லித்திகழ்வெ லாமொன்று சித்திப் 
பெருமைபே ரைப் புலனு மாரக் - கரவதிலா

81. வெள்ளவெளி யாயவடி மேவுமருட் கண்ணதனாற் 
கள்ளமற வெவ்வுருவுங் காணுமடி - தொள்ளைச்

82. செவிவழிய தின்றித் திகழொலியாய் நின்ற 
நவையிலடி நாடற் கரிதாய்ச்  சுவையதுறு

83. நாவினாலன்றி நலமாரத் தித்திக்கு 
மோவிலா வின்சுவையா மொப்பிலடி - மேவு

84. முடற்பரிச மின்றி யொழிவறுபே ரின்பத் 
திடப்பரிச மாகித் தெரிவுற் - றுடைக்குமிழான்

85. மேவு மணமின்றி விரிவொடுக்க மின்றாகித் 
தாவின் மணமாய்த் தயங்குமடி பாவியேன்

86. சென்னிகுடி கொண்ட வடி தீவினையே னெஞ்சதனின்
மன்னி யிருந்தவடி நான்மறந்துந் - தன்னொழிய

87. வுன்ன றவிர்த்தவடி யொன்றாகி நின் றவடி
யன்னையினும் தானெனக்கன் பானவடி - நன்னயமா

88. மன்பர்க் கெளியவடி யன்பதிலா நெஞ்சதுறும்
வன்பர்க்குச் சால வலியவடி - பென்பற்றாம்

89. வஞ்சத்தைச் சாடுமடி வாராது வந்தவடி
கொஞ்சிட் டுபநிடங்கள் கூவுமடி -தஞ்சமதாய்

90. நின்றபடி நின்றவடி நேரேயென் மோகத்தைக்
கொன்றவடி யுண்டிலையென் கோண்முழுது மன்றியு

91. மாற்றமது வாட்டுமடி வாழ்வறவாழ் வித்தவடி
போற்றுமடி யாரைமிகப் போற்றுமடி - யாற்றா

92. தருணினைந்தங் கள்ளூறு மன்பர்தஞ் சிந்தை
வெருளதற மெய்யே பொலிந்திங் - கிருளுமனத்

93. தென்னைப் பொருளாக வென்போ லுடல்சாத்தித்
தன்னைத் தருந்தம்பி ரான்றனடி - சென்னிக்கண்

94. வைத்து மனமகிழ்ந்து வாயார நான்வாழ்த்தும்
பித்ததுவாம் பேரன்பே தந்தருளெ - னத்தா

95. சிவப்பிரகா சாபோற்றி சீமானே போற்றி
யவக்கடலு லாழ்வேனை யாண்ட -தவக்கடலே

96. போற்றி சயசய பல்லாண்டு பல்லாண்டு
போற்றி சயசய போற்றீ

நேரிசை வெண்பா

என்புன் றலைமன்னு மின்பத் திருக்கழலை 
யன்பொன்றி யேத்த வனவரத - மின்பஞ்செய்
தாண்டானே தந்தருள் செய்யல்லது வேறொன்றையு
வேண்டா மையுமருள்வாய் மெய்.

// --- முடிவுற்றது --- //